பிரான்ஸில் காரொன்றில் இருந்து இரு குழந்தைகள் சடலமாக மீட்பு
பிரான்ஸில் கார் ஒன்றில் இருந்து இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) நகரின் குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இருந்து இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகளை பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மித மிஞ்சிய வெப்ப அலையால் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெப்பநிலை 39°C-ஐ எட்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மேற்படி இரு குழந்தைகளும் தாய்க்கு தெரியாமல் காருக்குள் ஏறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் தாயிடம் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




