தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில், பொது ஈகைச் சுடரினை தியாகி […]













