சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல் – போர்கள பயிற்சிக்கு தயாராகும் தைவான்
சீனாவின் அத்துமீறல்களை தொடர்ந்து தைவான் இராணுவம் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வாரம் ஐந்து நாள் போர் தயார்நிலை பயிற்சியை நடத்தவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தைபே அரசாங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி, சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று உரிமை கோரும் பகுதியில் தொடர்ச்சியாக ஊடுருவி வருகின்ற நிலையில் போர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“தயார்நிலை வரிசைப்படுத்தல் கட்டத்தின் போது, அனைத்து நிலைகளிலும் உள்ள படைப்பிரிவுகளுக்குப் போர் நடைமுறைகள் மற்றும் போர்க்களச் சூழலுடன் பரிச்சயமாகும் வகையில் பயிற்சி அளிப்பதே இதன் இதன் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமைதிக்காலத்திலிருந்து போர்க்காலத்திற்கான விரைவான மாற்றங்களையும் முன்னுரிமை வரிசைப்படுத்தல்களையும் வலுப்படுத்த இந்தப் பயிற்சி உதவும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




