உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கவிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்வி அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பரீட்சைக்கு தயாராவதற்கு நேரம் இருப்பதால், பரீட்சை கால அட்டவணையைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை முடிக்க 300 நாட்கள் தேவைப்படுவதாகவும் இதற்காக ஆகஸ்ட் 07 ஆம திகதிவரை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




