உலகம்

அமெரிக்கா ஈரான் மீது எப்போது, ​​ஏன் பொருளாதாரத் தடைகளை விதித்தது?

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா நீண்டகாலமாகத் தடைகளை விதித்து வருகிறது. 1979-இல் தொடங்கிய இந்தத் தடைகள் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போரின் காரணமாக இந்த ஆண்டும் தொடர்கிறது. 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானிய மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி, அமெரிக்கத் தூதர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா முதன்முறையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிய இறக்குமதிகளுக்குத் தடை விதித்ததுடன், சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களையும் முடக்கியது. […]

கருத்து & பகுப்பாய்வு

இஸ்ரேலில் ஆச்சரியமூட்டும் கணக்கெடுப்பு: 92 வீத பொது மக்கள் போரில் ஈரான் வெற்றி பெற்றதாக கருதுகின்றனர்

  • June 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்த போரும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமும், இஸ்ரேலின் நீண்டகாலப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும், ஈரானுக்கே அதிக நன்மை அளித்துள்ளதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புவதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு செய்தி நிறுவனமான AFP-இன் படி, ஜூன் 17 முதல் 20 வரை ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஆகம் நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் 3,644 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு முடிவுகளின்படி, 92.1 சதவீத இஸ்ரேலிய குடிமக்கள், […]

உலகம்

யுரேனியத்தைச் செறிவூட்டுவது எங்கள் உரிமை, அதை அமெரிக்கா ஏற்க வேண்டும்

  • June 21, 2026
  • 0 Comments

யுரேனியத்தைச் செறிவூட்டும் எங்கள் உரிமையை அமெரிக்கா ஏற்க வேண்டும் என ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாடு யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian), “வன்முறை, அடக்குமுறை மற்றும் அவமானத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். “செறிவூட்டும் உரிமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை அவர்கள் [அமெரிக்கா] ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என உறுதிப்பட […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி முதல் அணுசக்தி வரை : இறுதி ஒப்பந்தத்தின் வரைவு வருமாறு

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்திப் பணிகள் முதல் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் எண்ணெய் தடைகள் மீதான அமெரிக்காவின் விலக்குகள் வரை பலதரப்பட்ட பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் ஈரானும் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து வரும் 60 நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். குறித்த வரைவு […]

உலகம்

ஒப்பந்தத்தை எட்டும் தருணம் : திகதி பின்னர் அறிவிக்கப்படும்!!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக இன்று திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை இரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். மேற்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி வெனிசுலா மீதான முற்றுகையை போல் ஈரானை தாக்க ட்ரம்ப் திட்டம்!      

உலகம்

“முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” : அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!

  • June 11, 2026
  • 0 Comments

ரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்கா முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளும் என ஈரானின்    நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் (Mohammad-Bagher Ghalibaf) எச்சரிக்கை விடுத்துள்ளார். “தவறான உத்திகளும், அவசர முடிவுகளும் ஒட்டுமொத்த சூழலையும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் எரிசக்தி உள்கட்டமைப்பையும் சந்தைகளையும் சிதைத்து, நீங்கள் பல ஆண்டுகளாகச் சிக்கிக்கொள்ளும் ஒரு முடிவற்ற சகதியை உருவாக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நீங்கள் ஒரு மாறுபட்ட ஈரானைக் காண்பீர்கள்,” என்றும் அவர் மேலும் கூறினார். […]

உலகம்

ஈரானின் இராணுவத்தை அழித்ததாக ட்ரம்ப் பெருமிதம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தனது அசல் ஏவுகணை ஆயுதக் கிடங்கில் “சுமார் 21 அல்லது 22 சதவிகிதத்தை” மட்டுமே தற்போதை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே தனது வளைகுடா நட்பு நாடுகளை இலக்காகக் கொண்ட ஆறு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஏவுகணை அதன் இலக்கை அடையத் தவறியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரானின் ரேடார் தளங்கள் மீதான தாக்குதல் – விளக்கமளித்த அமெரிக்கா!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராணுவ மோதல்கள், பலவீனமான போர் நிறுத்தத்தத்தையே வெளிப்படுத்துகின்றன. இது மத்திய கிழக்கை நிலைப்படுத்துவதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியூடான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்குமான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும், பின்னர் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய கடலோர […]

உலகம்

இலக்கை தவறவிட்ட ஈரான்!! 47 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கோரும் ட்ரம்ப்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது இடைமறிக்கப்பட்டன என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவத் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தை இலக்காகக் கொண்ட இரண்டு ஏவுகணைகள் செல்லும் வழியிலேயே சிதறியதாகவும், பஹ்ரைனை இலக்காகக் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகள் இடைமறித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் […]

உலகம் முக்கிய செய்திகள்

அதிகரிக்கும் பதற்றம் – போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. ஈரானின் முக்கிய கோரிக்கைகளில்  லெபானில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் அங்கு இஸ்ரேல் கோரத் தாண்டவம் ஆடத்துவங்கியுள்ளது. உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் லெபனானின் அனைத்து பகுதிகளிலும் அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன்,  மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தத்தின் ஒரு முனையில் ஏற்படும் […]