உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் “இயற்கை உரிமை” – துணை நாடாளுமன்ற சபாநாயகர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை குறித்த புதிய கருத்துகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய துணை நாடாளுமன்ற சபாநாயகர் அலி நிக்ஸாத், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த ஈரானுக்கு இயற்கை உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை அல்ல; அது ஈரானின் இயற்கை உரிமை” என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த […]

உலகம்

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் திட்டங்களை வகுக்கும் அமெரிக்கா!

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட விளக்கங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் (Brad Cooper) மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரிடமிருந்து அவர் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது சாத்தியமான “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

உலகம் செய்தி

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

  • April 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு […]

உலகம் செய்தி

குளோபல் சுமுத் கப்பல் இடைமறிப்பு: இஸ்ரேலுக்கு இத்தாலி கண்டனம் – குடிமக்களை உடனே விடுவிக்க கோரிக்கை

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த குளோபல் சுமுத் கப்பல் குழுவை  இஸ்ரேல் இடைமறித்ததை இத்தாலி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், குளோபல் சுமுத் கப்பல் குழுவின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை இத்தாலி கண்டிப்பதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இத்தாலியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 24 இத்தாலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட […]

உலகம்

ஈரானின் நாணய பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நிலையற்ற போர் காரணமாக ஈரானின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய நாணயமான ரியால், டொலருக்கு 1.8 மில்லியன் என்ற சாதனை அளவிலான வீழ்ச்சியைச் பதிவுசெய்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களில், நாட்டிற்குள் வர்த்தகமோ அல்லது இறக்குமதிகளோ குறைவாக இருந்ததால், ரியால் நாணயம் நிலையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரியால் சரியத் தொடங்கி, நேற்று  சாதனை அளவிலான வீழ்ச்சியை எட்டியது. ரியாலின் வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும் […]

உலகம்

4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]

உலகம்

எண்ணெய் விலை உயர்வு : ஈரான் , ஓமானின் கூட்டு நடவடிக்கை!!

  • April 27, 2026
  • 0 Comments

போரின் காரணமாக உலக பொருளாதாரம் நளிவுற்று வருகின்ற நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஈரான் மற்றும் ஓமான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நீர்வழியில் உள்ள பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்கு நிபுணர் மட்டத்திலான ஆலோசனைகளைத் தொடர ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்தார். போரின் பொருளாதாரத் தாக்கம் ஆழமடைந்து வருவதால், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி இணக்கம் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம் செய்தி

போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.