உலகம்

ஈரான் தலைநகரில் மீண்டும் விமான நிலையங்கள் திறப்பு

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பிரதான விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி (Imam Khomeini) மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகிய இரண்டு முக்கிய விமான நிலையங்களும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் குழப்பம் – நேரம் கேள்விக்குறி

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை எப்போது நடைபெறும் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியதால், பேச்சுவார்த்தையின் நேரம் தற்போது தெளிவற்றதாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் போன்றே, அமெரிக்கக் குழுவை துணை ஜனாதிபதி JD Vance தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஈரான் தரப்பிலிருந்து முரண்பட்ட சிக்னல்கள் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் இரட்டை போர் நிறுத்தம் – தற்காலிக அமைதி

  • April 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தற்போது இரண்டு பகுதிகளில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயும், மற்றொன்று இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார போர் நிறுத்தம் புதன்கிழமை நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை போர் நிறுத்த மீறல் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் […]

உலகம்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு!

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இன்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணிப்பார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்த அதிகாரிகளை அனுப்பும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை. கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட […]

இலங்கை

240 ஈரானியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்!

  • April 15, 2026
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (15) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

  • April 12, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என அமெரிக்கா துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

  • April 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொள்ளவதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உலகம்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும்: IMF எச்சரிக்கை

  • April 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத […]

உலகம்

அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் !

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது அதிரடி தாக்குதல்

  • March 31, 2026
  • 0 Comments

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததனால், கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!