“ஜனாதிபதியிடம் பழைய பல்லவியை பாடிய தமிழ் பேசும் தலைவர்கள்”
தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் […]













