இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 437 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 428 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய அகழ்வின் போது வெள்ளை நிற பாசிமணியும், இரும்புத் தகட்டுத் துண்டும் ஒன்றும், வளையல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சான்றுப்பொருள்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை