அமெரிக்கா உக்கிர தாக்குதல்: ஈரானில் 50 பேர் பலி – 500 இற்கு மேற்பட்டோர் காயம்
ஜூலை 6 முதல் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சில நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





