உலகம் செய்தி

சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல் – அமெரிக்கர், பிரான்ஸ் நாட்டவருக்கு தொற்று உறுதி

ஹன்டா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, நாடு திரும்பிய மற்றொரு அமெரிக்கருக்கும் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உயிரியல் கட்டுப்பாட்டு பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, Stéphanie Rist, பாரிஸில் ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்த 22 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள MV Hondius கப்பலில் இருந்து 90 க்கும் மேற்பட்ட பயணிகள் தாயகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஸ்பானிய அதிகாரிகளின் தகவலின்படி, இன்னும் 54 பேர் கப்பலில் உள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!