சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல் – அமெரிக்கர், பிரான்ஸ் நாட்டவருக்கு தொற்று உறுதி
ஹன்டா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, நாடு திரும்பிய மற்றொரு அமெரிக்கருக்கும் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உயிரியல் கட்டுப்பாட்டு பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, Stéphanie Rist, பாரிஸில் ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்த 22 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள MV Hondius கப்பலில் இருந்து 90 க்கும் மேற்பட்ட பயணிகள் தாயகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஸ்பானிய அதிகாரிகளின் தகவலின்படி, இன்னும் 54 பேர் கப்பலில் உள்ளனர்.





