ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் – முன்னாள் ஆதரவாளர் வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சரும் ஸ்டார்மரின் ஆதரவாளருமான ஒருவர், பிரதமர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் வரை அமைச்சரவை அலுவலக அமைச்சராக இருந்த ஜோஷ் சைமன்ஸ் (Josh Simons) தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வேல்ஸில் உள்ள 40 கவுன்சில்கள் மற்றும் செனட் மீதான கட்டுப்பாட்டை தொழிற்கட்சி இழந்துள்ளது.

மேலும் சுமார் 1,500 கவுன்சிலர்கள் தங்கள் இடங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில், புதிய பிரதமருக்கான மாற்றத்திற்கு ஸ்டார்மர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோஷ் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்மரை தொழிற்கட்சி தலைவராக தெரிவு செய்ய உதவிய ‘லேபர் டுகெதர்’ சிந்தனைக் குழுவின் முன்னாள் இயக்குநரான சைமன்ஸ், “மக்களின் குரலை தொழிற்கட்சி கேட்கத் தவறிவிட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!