உலகம் செய்தி

போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் தாக்குதல்கள்

  • May 17, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய பதற்றம் இன்னும் குறையவில்லை என்று கூறப்படுகிறது. போர் ஆரம்பமானபோது, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நலன்களை இலக்குவைப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் தாக்குதல்களின் பெரும் பாதிப்பை ஐக்கிய அரபு அமீரகமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், […]

இலங்கை செய்தி

சிறிதரன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்

  • May 17, 2026
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரியமுறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை உத்தியோக பூர்வமாக கட்சி எடுத்த […]

இலங்கை செய்தி

IMF இன் 5 ஆவது, 6 ஆவது மதிப்பாய்வுகள் மே 27 இல்

  • May 17, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்தக் கூட்டத்தின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் நிதிச் சீர்திருத்தத் திட்டத்தின் வெற்றி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு ஆராயவுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முகாமை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் இதில் பிரதானமாக மதிப்பிடப்படும் என கூறப்படுகிறது […]

இலங்கை செய்தி

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்

  • May 17, 2026
  • 0 Comments

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா செய்தி

தேம்ஸ் நீர் நிறுவனத்தை அரசுடமையாக்குவது மீட்சியை தாமதப்படுத்தும் – முதலீட்டாளர்கள் எச்சரிக்கை

  • May 17, 2026
  • 0 Comments

கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் Andy Burnham முக்கிய நீர் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை மீண்டும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள Thames Water நிறுவனத்தை தற்காலிகமாக அரசுடைமையாக்குவது அதன் மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் என அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான பர்ன்ஹாம், தாம் ஒருநாள் பிரதமராக வந்தால் நீர் மற்றும் எரிசக்தி சேவைகளை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தனது […]

ஐரோப்பா செய்தி

வடக்கு இங்கிலாந்தில் ஒலிம்பிக் போட்டிகள்?

  • May 17, 2026
  • 0 Comments

2040 களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நடத்துவதற்கான வாய்ப்பை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் பிரித்தானியாவில் நடைபெறும். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் பொறுப்பு UK Sport அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வில், திட்டத்தின் செலவுகள், வடக்கு பகுதிகளுக்கு கிடைக்கக்கூடிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள், மேலும் பிரித்தானியாவின் முயற்சி வெற்றி பெறும் வாய்ப்புகள் போன்றவை […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு யார் காரணமோ அவர்களுக்கே மக்கள் பதவி வழங்கியுள்ளனர் – அருட்தந்தை ஆதங்கம்

  • May 17, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.இது வெறும் […]

இலங்கை செய்தி

17 வருடங்கள் கடந்தும் போர் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரபல நடிகர் நிழல்கள் ரவி கவலை

  • May 17, 2026
  • 0 Comments

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்த்து தமிழ் இனம் 30 ஆண்டுகள் உரிமைக்காக ஆயுதம் தூக்கி போராடியது. கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்டிஷில் பெரும் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல் – பலர் கைது

  • May 17, 2026
  • 0 Comments

ஸ்கொட்டிஷ் பிரீமியர்ஷிப் பட்டத்தை செல்டிக் எப்.சி (Celtic F.C) அணி வென்றதைத் தொடர்ந்து, இரசிகர்கள் Glasgow நகரில் திரண்டபோது பெரும் கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்ட்ஸ் (Hearts) அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வெற்றியை கொண்டாட, சுமார் 3,000 செல்டிக் ரசிகர்கள் ட்ரொங்கேட் (Trongate) பகுதியில் கூடியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவ அவசர உதவியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்ததாக ஸ்கொட்லாந்து பொலிஸார் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]