உலக அவசரநிலை பிரகடனம்
எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துடன், வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது.
நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொங்கோவில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பலமுறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்ட நிலையில், தற்போது 17-வது முறையாக மீண்டும் கொங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவி வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் மரண பயத்தை காட்டி வருகிறது.





