உலகம்

எபோலாவை கட்டுப்படுத்தியது உகாண்டா – இறுதி நோயாளியும் வீடு திரும்பினார்

எபோலா தொற்று இல்லாத மாநிலமாக உகாண்டா தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

உகாண்டாவில் கடைசியாக எபோலா நோயால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டைச் சேர்ந்த நோயாளி, ஜூன் 22 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 20 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

2000-ஆம் ஆண்டில் தனது முதல் பெருந்தொற்றை பதிவு செய்ததில் இருந்து, உகாண்டா பலமுறை எபோலா பரவல்களைச் சந்தித்துள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக நாடு பெற்ற நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தி, சமீபத்திய தொற்றுகளை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்