உலகம்

அமெரிக்காவுடனான பதற்றம் – ட்ரோன்களை வாங்கிக் குவிக்கும் கியூபா!

  • May 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் கியூபா   300-க்கும் மேற்பட்ட இராணுவ ட்ரோன்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ட்ரோன்களை பயன்படுத்தி குவாண்டநாமோ (Guantanamo) விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தளம், அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களை   மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் (Axios) இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. ட்ரோன் போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் ஹவானாவில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் இருப்பதன் காரணமாக, ட்ரம்ப் நிர்வாகம் […]

உலகம்

”தாய்நாட்டை பாதுகாப்போம்” : கியூப மக்கள் முழுக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், புதிய தடைகள் “கூட்டுத் தண்டனைக்கு” சமம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நேற்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பேரணியில் தாய்நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கங்களும் எதிரொலித்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்கிய பின்னர், ஹவானா மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ட்ரம்ப் பொருளாதார தடைகளை அறிவித்தார். […]

உலகம்

அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி

  • February 26, 2026
  • 0 Comments

கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது அந்நாட்டு கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Marco Rubio கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.