சுரேஷ் சலே சூழச்சி: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார். சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக்கூட முன்னெடுத்திருந்தார். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தொலைபேசி மற்றும் மடிக்கனிணி என்பவற்றின் கடவுச்சொல்லைக்கூட அவர் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. தகவல்களை மூடிமறைக்க முற்படுகின்றார். ஆனால் இதுவரை கிடைக்கப்பெற்ற விஞ்ஞானப்பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு மேற்படி […]













