இலங்கை

ஏப்ரல் 1 முதல் கொழும்பில் விசேட பாதுகாப்புத் திட்டம்

  • March 28, 2026
  • 0 Comments

இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து

  • March 27, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை

மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி இளம் பெண் நடனம்: கைது செய்யுமாறு உத்தரவு

  • March 24, 2026
  • 0 Comments

கொழும்பில் நடைபெற்ற “ரோயல் அவுருது குமரி” தெரிவு விழாவின் போது, மலைப்பாம்பு ஒன்றினை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள ‘ரோயல் மார்க்ஸ் அரினா’ (Royal Marks Arena) வளாகத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் […]

இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]

இலங்கை செய்தி

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு!

  • March 22, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.

இலங்கை

கொழும்பில் Parking Free!

  • March 18, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இனி வாகனங்களை நிறுத்துவதற்கு தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த! பின்னணி என்ன?

  • December 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீண்டும் கொழும்பில் (Colombo) குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது. நுகேகொடை (Nugegoda) , மிரியான (Mirihana) பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள (Wijerama Mawatha) அரசாங்க உத்தியோகப்பூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த ராஜபக்ச தங்கி வந்தார். எனினும், முன்னாள் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 23, 2025
  • 0 Comments

“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார். “ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது. அனர்த்த நிலைமையில் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]

செய்தி

அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் […]