ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்டாமர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள திட்டங்களில்  முக்கியமான 05  வாக்குறுதிகள் வருமாறு, 01. பிரித்தானியாவின் ஆயுதப்படைகளில் ஏற்பட்டுள்ள வலுவிழப்பை மாற்றியமைக்க அவர் உறுதியளித்துள்ளார். 02. முன்னர் போதிய நிதி ஒதுக்கப்படாத பாதுகாப்புத் திட்டத்தை உருமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.  (இது கடந்த […]

ஐரோப்பா செய்தி

வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வார நாட்களில் தடைப்படும் ரயில் சேவைகள்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அவசியமானால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தேம்ஸ்லிங்க் (Thameslink), கிரேட் நார்தர்ன் (Great Northern) மற்றும் சதர்ன் (Southern) சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் அவசியம் என்றால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சேவைகள் குறைக்கப்படும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் ரயில் பாதை – பயணிகளின் கவனத்திற்கு

  • June 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் (Bedford ) பகுதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அந்த பாதை புனரமைப்பு பணிகளுக்காக வரும் 28 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெட்ஃபோர்டுக்கும் (Bedford ) லண்டன் செயின்ட் பான்கிராஸுக்கும் (London St Pancras) இடையிலான ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த ரயில் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இடம்பெறும் திருட்டு நடவடிக்ககைளுக்கு இந்த 100 பேர் தான் காரணம்?

  • June 20, 2026
  • 0 Comments

கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,300-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு வெறும் 104 தொடர் குற்றவாளிகளே காரணமாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்திய லண்டன் பெருநகர காவல்துறை, கடைகளில் திருடுபவர்களுக்கு விரைவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 104 நபர்களில் ஒவ்வொருவரும் சிறைக்குச் செல்வதற்கு முன்பு குறைந்தது 31 முறையாவது சட்டத்தை மீறியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட மொத்த வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடைத்திருட்டுக் குற்றங்களாகும். இந்தக் குற்றவாளிகளில் மூவரைத் தவிர மற்ற […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுகிறது – புதிய ஆய்வில் தகவல்

  • June 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் நிலவுவதாகவும், முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என்றும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, பிரித்தானிய பொதுமக்களில் 17 சதவீதம் பேர் முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தல் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 19 சதவீதம் பேர் இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள் வெள்ளையர்களைப் போல பிரித்தானியர்கள் அல்ல என்று உடன்படவில்லை. கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் முஸ்லிம்களும் முஸ்லிம் […]

ஐரோப்பா

பிரித்தானியா : வாகனங்களில் கொடிகளை பறக்கவிட்டால் அபராதம்

  • June 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின்  கால்பந்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிட்டால், அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் போது தங்கள் கார்களில் கொடிகளைப் பறக்கவிடத் திட்டமிடும் ஓட்டுநர்களுக்கு, £2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் கொடிகளை பறக்கவிட திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும், ஒரு வாகனத்தில் தவறான முறையில் கொடியைப் பறக்கவிடுவது சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகும், சாலை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி மீது கொலைகுற்றச்சாட்டு!! நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 12, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுடன் தொடர்புடைய 14 வயது சிறுமி  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் காணொளி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது ​​அவர் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும், பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும்  எதிர்கொண்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக, கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய அடுத்த விசாரணை ஜுன் 19 அன்று ஓல்ட் […]

ஐரோப்பா

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலில் குறைப்பாடு!! தாமதமாகும் பயணம்!

  • June 6, 2026
  • 0 Comments

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) கப்பலில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 3.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த விமானம் தாங்கி கப்பல், அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புறப்பட்டிருந்தது. இந்நிலையில் நோர்வேயின் ஸ்டாவாங்கர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தொழில்நுட்ப கேளாாறை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுதுதியுள்ளனர். மேற்படி கோளாறு சீரமைக்கப்பட்டவுடன் வரும் நாட்களில் கப்பல் தனது பயணத்தைத் தொடரும் என்றும் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சீக்கியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?

  • June 3, 2026
  • 0 Comments

பிரத்தானியாவில் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. திக்வாவின் செயல்கள் சீக்கிய போதனைகளுக்கு முரணானவை என்று கூறி அவற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால், பிரத்தானியா முழுவதும் சீக்கியர்கள் பரவலாகக் குறிவைக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சீக்கியர்கள் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக வரும் செய்திகளால், தங்கள் சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதாக சீக்கியத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,  நோவாக்கின்  இறுதித் தருணங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யுமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குருத்வாராக்களில் கூடுதல் பாதுகாப்பு […]