04 ஆவது வெப்ப அலைக்கு தயாராகும் பிரித்தானியா – காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை
பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் வெப்பநிலை வேகமாக 32-33°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வெப்ப அலை குறுகிய காலமே நீடிக்கும் என்றும், வார இறுதிக்குள் வெப்பநிலை பரவலாக சராசரி நிலைக்குக் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இங்கிலாந்து அதிக வெப்பநிலையை அனுபவிக்கும் அதே வேளையில், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் மேகமூட்டமும் மழையும் காணப்படும் என மெட் அலுவலகம் முன்னுரைத்துள்ளது.
இதற்கிடையே கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில், குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், ‘மிகவும் கடுமையான’ காட்டுத்தீ அபாயம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.





