ஐரோப்பா முக்கிய செய்திகள்

04 ஆவது வெப்ப அலைக்கு தயாராகும் பிரித்தானியா – காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை

பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் வெப்பநிலை வேகமாக 32-33°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த வெப்ப அலை குறுகிய காலமே நீடிக்கும் என்றும், வார இறுதிக்குள் வெப்பநிலை பரவலாக சராசரி நிலைக்குக் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு இங்கிலாந்து அதிக வெப்பநிலையை அனுபவிக்கும் அதே வேளையில், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் மேகமூட்டமும் மழையும் காணப்படும் என மெட் அலுவலகம் முன்னுரைத்துள்ளது.

இதற்கிடையே கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில், குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், ‘மிகவும் கடுமையான’ காட்டுத்தீ அபாயம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்