ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் முன்னாள் படையினருக்கு சிறப்பு நீதிமன்றம் ஸ்தாபிப்பு

  • July 31, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது. “உயிரைக் காக்கும் முயற்சி” என ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் திட்டம், தகுதியான முன்னாள் வீரர்களுக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கிட உதவும் ஒரு சிறப்பு சிகிச்சைமுறை நீதிமன்றமாக (Therapeutic Court) இயங்கும். ‘தடயவியல் மற்றும் பாதுகாப்புப் படையினர் தற்கொலை தொடர்பான அமைக்கப்பட்ட அரச ஆணையத்தின்’ (Royal […]

மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான 'செயுத்தா' (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக் களமிறக்கியுள்ளது. உலகம் செய்தி

படையெடுத்துவரும் குடியேறிகள்: இராணுவத்தைக் களமிறக்கியது ஸ்பெயின்

  • July 31, 2026
  • 0 Comments

மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான ‘செயுத்தா’ (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக் களமிறக்கியுள்ளது. அதேவேளையில், அருகில் உள்ள மற்றொரு ஸ்பெயின் பிராந்தியத்தையும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று மட்டும் சுமார் 2,000 முதல் 3,000 பேர் வரை செயுத்தாவிற்குள் நுழைந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டின் அரசுத் தொலைக்காட்சியான TVE செய்தி வெளியிட்டுள்ளது. வெளியான வீடியோ காட்சிகளில், மொராக்கோ பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான […]

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆயுதக் களைவா? ராணுவ ஆக்கிரமிப்பா? – காசா அமைதி ஒப்பந்தத்தில் தொடரும் குழப்பங்கள்

  • July 31, 2026
  • 0 Comments

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது வெறும் ‘வரைவுத் திட்டம்’ (Draft) மட்டுமே என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்கும் என்பதில் இஸ்ரேல் சந்தேகத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இன்று, அமைதி வாரியம் (Board of Peace) […]

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

FIFA போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு

  • July 30, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) உலகக் கோப்பைப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்திற்கு UEFA வின் உறுப்பு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தனியார் முதலீட்டாளர்களின் 20 சதவீத பங்களிப்புடன், 20 பில்லியன் டொலர் வணிக நடவடிக்கையாக உலகக் […]

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி

  • July 30, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த பெப்ரவரி மாதம், இந்தத் தடை […]

உலகம் செய்தி

ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை? சீனா மறுப்பு

  • July 30, 2026
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகள் (Air-defence missile launchers) சில வாரங்களுக்குள் ஈரானுக்கு கிடைக்கவுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சீனா முற்றாக மறுத்துள்ளது. சீனாவிலிருந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறவுள்ளதாகப் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின்படி, முதற்கட்ட விநியோகங்கள் மேற்கு சீனாவில் உள்ள உரும்கியிலிருந்து (Urumqi) பாகிஸ்தான் வழியாக ஈரானைச் சென்றடையும் […]

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதுடன், பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி முழுவதிலும் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு - திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் […]

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் […]

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமனம்

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது நீண்டகாலப் பயணத்தை இந்த மாதத் தொடக்கத்தில் முடித்துக் கொண்ட ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) செப்டம்பர் 2030 வரை நீடிக்கும் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான பிளெமிங், […]