இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு - திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதனையடுத்து இந்தக் கட்டளை வழங்கும் திகதியை நீதிமன்றம் அறிவித்தது.

அந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை தாமே முன்வைத்தார்.

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இதுபோல் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி., சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில் வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தமையை அடுத்து அந்த விவகாரத்தையொட்டி நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை