ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான 'பசிஜ்' (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். செய்தி

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது: ஈரான் திட்டவட்டம்

  • August 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. “ஹோர்முஸ் நீரிணையானது இன்று இஸ்லாமியக் குடியரசின் (ஈரான்) மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை பார்க்கிறீர்கள். நமது நாடு முழுமையான பாதுகாப்புடன் தன் பாதையில் தொடர்ந்து செல்கிறது” […]

UN Special Rapporteur concerned over proposed increase in judges’ retirement age இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் அதிருப்தி

  • August 13, 2026
  • 0 Comments

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் , நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ.நாவின்சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 07 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தம், அதன் தற்போதைய வடிவம் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில், நீதித்துறை சுதந்திரம் மற்றும் […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தும் எபோலா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  • August 13, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை கூறுகையில், தற்போதைய வேகத்தில் பரவினால், இந்த பாதிப்பானது 2014 முதல் […]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது

  • August 13, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. சர்வதேச கடல் எல்லையை மீறி, சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தரைமட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்

  • August 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. பொது​மக்​களை ஏமாற்​ற பயன்​படுத்​தப்​படும் சட்​ட​விரோத செயலிகளை கண்​டறிந்து தடை செய்ய மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்து பெங்​களூரு மத்​திய தொகுதி பாஜக உறுப்​பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்​திய உள்​துறை இணை​யமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் மக்​களவை​யில் எழுத்து மூலம் வழங்கியுள்ள பதிலில், […]

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை 'ஒன் நேஷன்' (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க ‘One Nation’ அழுத்தம்

  • August 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா சந்தித்து வரும் வீடுகள் பற்றாக்குறை மற்றும் சேவைத் துறைகளில் உள்ள நெரிசல், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் அழுத்தங்கள் காரணமாக, புலம்பெயர்வு அளவுகள் குறித்த விவாதம் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியப் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரை அரசியல் கட்சிகள் […]

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

கொலம்பியாவில் 500 பேர் மாயம்: 10,000 வீடுகள் சேதம்

  • August 13, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு புதன்கிழமையுடன் 72 மணி நேரம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. வழக்கமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கு இந்த 72 மணி நேரமே மிக முக்கியமான காலக்கட்டமாகக் கருதப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் […]

இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக அதிகரிப்பு

  • August 13, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11 நாட்களில் 5,714 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 48, 244 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8,116 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,478 பேரும், ஊவா மாகாணத்தில் 2,543 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

  • August 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய (Northern Territory) காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அத்துமீறல் சம்பவம் நடப்பு ஆண்டின் ஜூன் 19 அன்று தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்குமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட தொலைபேசி எண் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இருப்பதை அடையாளம் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு

  • August 13, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: “மேற்படி அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. […]