ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய (Northern Territory) காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அத்துமீறல் சம்பவம் நடப்பு ஆண்டின் ஜூன் 19 அன்று தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்குமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட தொலைபேசி எண் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இருப்பதை அடையாளம் கண்ட பிறகு, ஜூலை 29 அன்று காவல் துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொலைபேசி எண்ணிற்குப் பின்னால் இருந்த ஆலிஸ் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் நேற்று அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

தகவல்தொடர்பு சேவையைப் பயன்படுத்தித் தொல்லை தருதல், அச்சுறுத்துதல் அல்லது குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய ஐந்து காமன்வெல்த் சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பாதிக்கப்பட்ட வேறு ஏதேனும் பெண்கள் இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்குமாறு வடக்கு பிராந்திய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“இந்தச் சம்பவத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி