இரண்டாவது குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு 6 மாத விடுப்புக்குப் பதிலாக 7 மாத விடுப்பு வழங்கப்படவுள்ளது. உலகம் செய்தி

குழந்தைப்பேற்றிற்கான கூடுதல் சலுகைகளை அறிவித்தது வியட்நாம்

  • July 2, 2026
  • 0 Comments

குறைந்துவரும் பிறப்பு விகிதம் மற்றும் வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகை ஆகியவற்றின் பின்னணியில், இரண்டு குழந்தைகள் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ஓராண்டுக்குப் பின்னர், வியட்நாம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கொள்கையின்படி, இரண்டாவது குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு 6 மாத விடுப்புக்குப் பதிலாக 7 மாத விடுப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், குறைமாதப் பிரசவங்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அரசாங்க மானியங்களும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தாய்மார்களுக்கு பணமும் வழங்கப்படும். […]

சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை பொலிஸார் புதன்கிழமை மூன்று பேரைக் கைது செய்தனர். இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் விஜய் அரசை கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதி முறியடிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம், ஒரு முழுமையான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை பொலிஸார் புதன்கிழமை […]

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மோதல், நாளை காலை இலங்கை நேரப்படி 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. செய்தி விளையாட்டு

ரொனால்டோவா, மோட்ரிக்கா? ஜாம்பவான்களின் இறுதி சமர்

  • July 2, 2026
  • 0 Comments

உலகக் கால்பந்தின் இரண்டு ஜாம்பவான்களின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான தருணங்களுக்கான களம் நாளை காலை தயாராகியுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும், லூகா மோட்ரிக்கின் குரோஷியா அணியும் நேருக்கு நேர் மோதும்போது, ​​அது ஒரு நாக்-அவுட் போட்டியாக மட்டுமல்லாமல், இந்த இரண்டு உலகப் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக வரலாற்றில் இடம்பிடிக்கவும் கூடும். உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மோதல், நாளை […]

சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது. உலகம் செய்தி

முஸ்லிம்களின் புனித பூமிக்குள் இஸ்ரேல் குடியேறிகள் அத்துமீறல் – பெரும் பதற்றம்

  • July 2, 2026
  • 0 Comments

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள், இஸ்ரேலிய காவல்துறையினரின் பாதுகாப்போடு இஸ்ரேலிய குடியேறிகள் பலவந்தமாக நுழைந்துள்ளனர். இக்குடியேறிகள் மசூதியின் “முற்றங்களுக்குள் நுழைந்து சமய சடங்குகளை (Talmudic rituals) மேற்கொண்டனர்” என்று பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் […]

இலங்கை செய்தி

இலங்கையை வருமானமுள்ள நாடாக தரம் உயர்த்தியது உலக வங்கி

  • July 2, 2026
  • 0 Comments

மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட தனது அண்மைய வருமான வகைப்பாட்டுப் புதுப்பிப்பில், சிறிலங்காவை கீழ்-நடுத்தர வருமானப் பிரிவிலிருந்து தரமுயர்த்தியுள்ளது. இலங்கையை “மீட்சியின் கதை” என்று விவரித்துள்ள உலக வங்கி, “2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற மூன்று […]

"சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்" என்று Ghalibaf வலியுறுத்தியுள்ளார். செய்தி

ஒன்று திரள்வோம் – பலத்தை காட்டுவோம்: ஈரான் மக்களுக்கு அழைப்பு

  • July 2, 2026
  • 0 Comments

மறைந்த உச்ச தலைவர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஈரான் சபாநாயகர் Mohammad Bagher Ghalibafஅழைப்பு விடுத்துள்ளார். “சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்” என்று Ghalibaf வலியுறுத்தியுள்ளார். “பழிவாங்கலுக்கான தேசத்தின் குரல் உலகம் முழுவதிலும் உள்ளவர்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய போரின் […]

இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையான நிலப்பரப்பு ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

1000 நாட்கள் கடந்தும் காசாவில் தொடரும் அவலம்

  • July 2, 2026
  • 0 Comments

காசாவில் கடந்த ஆயிரம் நாட்களாகத் தொடரும் போர் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையான நிலப்பரப்பு ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் 72 ஆயிரத்து 956 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். ஒரு லட்சத்து 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 947 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான […]

உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. செய்தி

24 வருடகால காத்திருப்பு: நிறைவேறியது அமெரிக்காவின் கனவு

  • July 2, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. இதன் மூலம் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான 24 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பரபரப்பான மற்றும் அதிவேகமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதிப் பகுதியில், அமெரிக்காவின் போலரின் பலோகன் (Folarin Balogun) முதல் கோலை அடித்தார். […]

ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உச்ச கட்ட பாதுகாப்பு: ஈரான் படைகள் தயார் நிலையில்

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமெனியின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, ஈரானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள உயர்மட்ட அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக ஈரானியப் படைகளின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் […]

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது கொரியா

  • July 2, 2026
  • 0 Comments

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய […]