உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உச்ச கட்ட பாதுகாப்பு: ஈரான் படைகள் தயார் நிலையில்

ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார்.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமெனியின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, ஈரானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள உயர்மட்ட அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக ஈரானியப் படைகளின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகள் தங்களது தீவிரப் பாதுகாப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளன,” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானின் வான் பாதுகாப்புப் படையினர் நாட்டின் வான்வெளியை முழுமையாகத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் Mohammad Akraminia மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் தலைநகர் தெஹ்ரானில் அலி காமனெயியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வுகளில் 15 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி