உலகம் செய்தி

முஸ்லிம்களின் புனித பூமிக்குள் இஸ்ரேல் குடியேறிகள் அத்துமீறல் – பெரும் பதற்றம்

சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது.

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள், இஸ்ரேலிய காவல்துறையினரின் பாதுகாப்போடு இஸ்ரேலிய குடியேறிகள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இக்குடியேறிகள் மசூதியின் “முற்றங்களுக்குள் நுழைந்து சமய சடங்குகளை (Talmudic rituals) மேற்கொண்டனர்” என்று பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது.

இதனை 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் சர்வதேச சமூகத்தின் பெரும்பாலான நாடுகளின் அங்கீகாரம் இன்றி, இப்பகுதியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

முஸ்லிம்களின் மூன்றாவது மிகப்புனிதமான இடமாகக் கருதப்படும் இந்த மசூதி, சர்வதேச அங்கீகாரம் பெறாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதியில் அமைந்துள்ளது.

முகம்மது நபி விண்ணுலகிற்குச் சென்ற இடமாக நம்பப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்டகாலமாகத் தொடரும் பதற்றத்தின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.

தற்போதைய இந்த ஊடுருவல் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி