இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

  • August 20, 2026
  • 0 Comments

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 380 மதிப்பீட்டு குழுக்களின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த […]

கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய தம்பதி விமான விபத்தில் பலி

  • August 19, 2026
  • 0 Comments

கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகருக்கு அருகிலிருந்து பிரபல சுற்றுலாத் தீவுக்குச் செல்வதற்காக இவர்கள் தனியாருக்குச் சொந்தமான ‘பெல் 206’ (Bell 206) ரக ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தியதாகக் கருதப்படுகிறது. உயிரிழந்த க்ரோமி, பிரபல ‘பிளாக்ஸ்டோன்’ (Blackstone) நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்கு பிளாக்ஸ்டோன் நிறுவனம் ஆழ்ந்த […]

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட முடிவு இலங்கை செய்தி

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட முடிவு

  • August 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் […]

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு - 583 எலும்புக் கூடுகள் மீட்பு இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு – 583 எலும்புக் கூடுகள் மீட்பு

  • August 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன. இன்றைய அகழ்வின் போது ஒரு எலும்புக்கூடு புதிதாக அடையாளம் காணப்பட்டது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 56 வது நாளான இன்று 10 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது .அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்ட அகழ்விற்கு அனுமதிக்கப்பட்ட […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு

  • August 19, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் […]

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது . இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய […]

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். உலகம் செய்தி

ஈராக்கில் களமிறங்கினார் ஈரான் சபாநாயகர்: பின்னணி என்ன?

  • August 19, 2026
  • 0 Comments

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஈராக் அதிகாரிகளையும், ஈரானின் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டணியின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் போராளிக் குழுக்கள், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரக இலக்குகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையான உறவைப் பேண முயலும் பாக்தாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் […]

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு இலங்கை செய்தி

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

  • August 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த […]

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் EHang நிறுவனத்தினால் இந்த ட்ரோன் சேவை செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். முதல் கட்டத்தின் கீழ் கொழும்பில் இருந்து தெற்கு கடற்கரை பிரதேசத்திலுள்ள இடங்கள் வரையிலும் கட்டுநாயக்கவில் இருந்து துறைமுக நகரம் வரையிலும் ட்ரோன் சேவை முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், அவசர அனர்த்த சேவைகளுக்காக பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் […]

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி

கனடாமீதான 50 சதவீத வரியை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

  • August 19, 2026
  • 0 Comments

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த தடைகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அவகாசத்தை […]