கல்வி செய்தி

கலாசார மரபுத் தளங்களை பாதுகாக்குமாறு பிரதி அமைச்சர் பணிப்பு

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சர் இன்று (04) நேரில் சென்று கள விஜயம் மேற்கொண்டார்.

இயற்கை பேரிடர்களால் சேதமடைந்திருந்த இத்தலம், கடந்த ஆட்சிக் காலங்களில் சில சமூக விரோதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், இத்தளத்திற்குச் செல்லும் வீதியைச் செப்பனிடவும் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கள ஆய்வின்போது, சேருவிலை பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா சச்சிதேவன், வைத்திய கலாநிதி சதீஸ்குமார், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி