பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த சந்தேக நபரைப் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என அடையாளப்படுத்தினார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர் […]













