நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும் […]

Anthony Albanese signed the Ocean of Peace treaty with Fiji's President Ratu Naiqama Tawakecolati Lalabalavu and Sitiveni Rabuka. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவுக்கு ‘செக்’ – பிஜி நாட்டுடன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தம்

  • July 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் பிஜி (Fiji) ஆகிய நாடுகளுக்கிடையில் இடையே புதிய பாதுகாப்பு கூட்டணி (Defence alliance) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உடன்படிக்கைக்கு மேலதிகமாக இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாய நிலப்பரப்பில் (Strategic landscape) முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பிஜியின் தலைநகரான சுவாவில் (Suva) நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் பிஜி பிரதமர் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். செய்தி

சிறைச்சாலை மோதல்: அறிக்கை கோருகிறது நீதி அமைச்சு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு […]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான 'மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். செய்தி விளையாட்டு

மே 17 இயக்கத்துடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சென்னையில் பேச்சு

  • July 6, 2026
  • 0 Comments

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பொலிஸ் கூட்டணியை உருவாக்குகிறது ஆஸ்திரேலியா

  • July 6, 2026
  • 0 Comments

பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் புதிய பசிபிக் பொலிஸ் கூட்டமைப்பு (Pacific policing bloc) வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா முதன்முறையாக நியூயார்க்கில் நடத்தும் ஐ. நா. பொலிஸ் தலைவர்கள் மாநாட்டில் (UNCOPS) , ஆஸ்திரேலியா பெரடல் பொலிஸ் ஆணையாளர் கிறிஸ்ஸி பாரெட் (Krissy Barrett) இந்த திட்டம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேல் மற்றும் நியூயார்க் பொலிஸ் (NYPD) தலைவர் ஜெசிகா டிஷ் ஆகியோரையும் சந்திக்கவுள்ள ஆஸ்திரேலியா பெரடல் […]

பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading scorer) என்ற பெருமையுடன் விடைபெறுகிறார். செய்தி விளையாட்டு

16 ஆண்டுகால பயணம் நிறைவு: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்

  • July 6, 2026
  • 0 Comments

நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர் (Neymar Jr.) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading […]

நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

அசுர பல அணியை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தது நோர்வே

  • July 6, 2026
  • 0 Comments

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் வீரர் புருனோ கைமரேஸ் (Bruno Guimaraes) தவறவிட்ட பெனால்டி வாய்ப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம் – இருவர் பலி: 33 பேர் காயம்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர். சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பொலிஸ்நிலையங்களின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். கைதிகளின் உறவினர்கள் தற்போது சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துள்ளனர். அதேவேளை, […]

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதி முயற்சியை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு இடமளிக்க கூடாது – துருக்கி ஜனாதிபதி

  • July 5, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சிகள் பிராந்திய நாடுகளின் ஆதரவின்றி வெற்றியடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்தான்புல்லில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் (Shehbaz Sharif) இணைந்து உரையாற்றிய Erdogan, “பிராந்திய நாடுகளின் விருப்பத்திலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் பலத்தைப் பெறாத எந்தவொரு தீர்வும் நிலையானதாக இருக்க முடியாது” என்று கூறினார். “அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை சீர்குலைக்க […]

உலகம் செய்தி

நீதிகோரும் போராட்டத்தை ஈரான் கைவிடாது

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானின் உச்ச தலைவருக்குஅஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்தது ஈரானிய மக்களின் பெருமையையும் வலிமையையும் உலகுக்கு பறைசாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். ” நீதி பெறுவது என்பது ஒரு நிலையான லட்சியமாக இருக்கும். மேலும், சர்வதேச தலைவர்களின் வருகையானது ஈரானின் அரசியல் அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.