மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை செய்தி

டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள் களமிறக்கம்

  • July 4, 2026
  • 0 Comments

மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது. டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பாரிய பொதுச் சுகாதார வேலைத்திட்டம் மேல் மாகாணம் முழுவதும் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகளவான […]

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்து

  • July 4, 2026
  • 0 Comments

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. வர்த்தகர்களின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது. மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். எதிரணிகளின் விமர்சனத்தை போலியான தகவல் […]

உலகம் செய்தி

சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – ஒருவார கால அவகாசம்

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் விரும்புவதாகவும், கமேனியின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு வாஷிங்டன் ‘ஒரு வாரம் அவகாசம்’ அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தைக் குறிப்பிட்டு , டிரம்ப் இதனைப் பேசியுள்ளார். அமெரிக்காவின் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு மவுண்ட் ரஷ்மோரில் (Mount Rushmore) நடைபெற்ற நிகழ்வில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அமெரிக்காவின் […]

தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த 64,478 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இருமுறை அர்ஜென்டினாவின் முன்னிலையைச் சமன் செய்து மிரட்டியது. செய்தி விளையாட்டு

உச்ச கட்ட பரபரப்பு – போராடி வென்றது அர்ஜென்டினா

  • July 4, 2026
  • 0 Comments

விறுவிறுப்பான ஆட்டத்தில், அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கேப் வெர்டே (Cape Verde) அணியை, கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட Own Goal உதவியுடன் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு (Last 16) தகுதி பெற்றுள்ளது. தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த 64,478 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இருமுறை அர்ஜென்டினாவின் முன்னிலையைச் சமன் செய்து மிரட்டியது. கூடுதல் […]

இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் 70 சதவீதமானோர் போதைக்கு அடிமை

  • July 4, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, ஜனாதிபதி தலைமையில் கூடியது. மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் […]

செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

பாலஸ்தீன கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எகிப்து பயிற்சியாளர்

  • July 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை ஒட்டுமொத்த அரபு உலகத்துடன் சேர்ந்து பாலஸ்தீன மக்களும் இரவு முழுவதும் கொண்டாடினர். டல்லாஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான (Round of 32) போட்டியில், கூடுதல் நேர முடிவில் எகிப்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என சமநிலை வகித்தன. அதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி […]

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களும், அதிகாரப்பூர்வ தூதுக்குழுக்களும் ஈரான் தலைநகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்த அணிதிரண்ட உலக பிரதிநிதிகளின் பட்டியல் இதோ….

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது. நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில் பெரும் திரளான மக்கள் கூட்டமும், ஏராளமான சர்வதேச முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று வருகின்றனர். அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களும், அதிகாரப்பூர்வ தூதுக்குழுக்களும் ஈரான் தலைநகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்களின் விவரம் வருமாறு, […]

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இலங்கை செய்தி

திருமாவளவனுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு!

  • July 4, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டனர். சென்னையிலுள்ள வி.சி.க. தலைமைப் பணிமனையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள், வடக்கு – கிழக்கு மக்களின் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் தமிழக – ஈழத்தமிழர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் […]

இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா பறக்கிறார் நெதன்யாகு

  • July 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் இன்று தொலைபேசி வாயிலாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த முக்கிய சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதிஇன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமேனிக்கு இறுதி சடங்கு இடம்பெற்றும்வேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்தத் […]

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி

குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்த மாணவரால் ஏற்பட்ட விபரீதம்

  • July 3, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை நேர முடிவின் பின்னர், குறித்த மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையில், சக மாணவர் ஒருவர் அங்கிருந்த குளவிக்கூட்டின் மீது கல் எறிந்துள்ளார். இதனால் கலைந்து வந்த குளவிகள், அங்கிருந்த மாணவர்களையும் பெண்ணொருவரையும் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.