மியன்மார் கடற்கரைக்கு அருகே சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்
சமீபத்திய நாட்களில் மியான்மர் கடற்கரைக்கு அருகே 500க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்கின்றனர்.
அவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டன.
இவற்றில் பெரும்பாலும் ரோஹிங்கியா பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களில் சிலர் வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் ஐ.நா அமைப்பு வெளியிட்டள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




