ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கான உரிமை : லண்டன் உயர்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • July 10, 2026
  • 0 Comments

பிரித்தானிய  உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குபவர்கள்  தஞ்சம் கோருவதற்கான உரிமையை இரத்து செய்தது. பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட One in – One out ஒப்பந்தம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என  லண்டன் உயர்  நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கிளைவ் ஷெல்டன், 2025-ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்பட்டவர்களில் 79 சதவீதமானோர் மறுபரிசீலனையில் […]

ஐரோப்பா

ஆப்கானியர்களை நாடு கடத்தும் தீர்மானம் : இழுபறியில் பேச்சுவார்த்தை!

  • June 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த  தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்காத போதிலும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாடு கடத்துவதை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், ஐரோப்பிய ஆணையம் தலிபான் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் , […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் உண்மையான எண்ணிக்கை!! தவறான கண்ணோட்டத்தில் மக்கள்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிகரக் குடியேற்றம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை 171,000 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருந்தபோதிலும்,  கிட்டத்தட்ட பாதி பிரித்தானியர்கள் (49 சதவீதம்) நிகர குடியேற்றம் அதிகரித்துள்ளதாகத் தவறாக நம்புகிறார்கள். வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான சரிவைப் பற்றி அறிந்திருப்பதாக பிரிட்டிஷ் ஃபியூச்சர் (British Future) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் […]