ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் உண்மையான எண்ணிக்கை!! தவறான கண்ணோட்டத்தில் மக்கள்!

பிரித்தானியாவில் நிகரக் குடியேற்றம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை 171,000 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருந்தபோதிலும்,  கிட்டத்தட்ட பாதி பிரித்தானியர்கள் (49 சதவீதம்) நிகர குடியேற்றம் அதிகரித்துள்ளதாகத் தவறாக நம்புகிறார்கள்.

வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான சரிவைப் பற்றி அறிந்திருப்பதாக பிரிட்டிஷ் ஃபியூச்சர் (British Future) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின்  எண்ணிக்கையை மக்கள் மிகையாக மதிப்பிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

; உண்மையான எண்ணிக்கை சுமார் ஒன்பது சதவீதமாக இருக்கும் நிலையில், அவர்கள் அந்த விகிதத்தை 33 சதவீதமாகக் கருதுவதாக தெரியவந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!