தென் சீனக் கடல் தீவுக்கூட்டம் – சீனாவை எச்சரிக்கும் வியட்நாம்
தென் சீனக் கடல் தீவுக்கூட்டத்தில் அனைத்து வெளிநாட்டு நடவடிக்கைகளையும் உறுதியாக எதிர்ப்பதாக வியட்நாம் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய தீவில் சீனா புதிய உள்கட்டமைப்புகளைக் கட்டி வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து வியட்நாம் அரசாங்கம் இவ்வாறு அறிவித்தது.
இது ஒரு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ரேடார் அமைப்பின் தொடக்கமாக இருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசிய வியட்நாமிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், வியட்நாம் இதை வன்மையாக எதிர்ப்பதாகவும், இவ்விஷயத்தில் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.
1974 முதல் சீனா இந்தத் தீவுக்கூட்டத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்துள்ளது. முழுத் தீவுக்கூட்டத்திற்கும் உரிமை கோரும் வியட்நாம், சமீபத்திய ஆண்டுகளில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை மேலும் தெற்கே விரிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
அருகிலுள்ள கடல் எல்லைகளுக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உரிமை கோருகின்றன.




