காசாவில் முழு அளவிலான போர் – இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு
காசாவில் முழு அளவிலான போரை மீண்டும் தொடங்கவும், அங்குள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27 ஆம் திகதி இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மற்றொரு வலதுசாரி போட்டியாளரிடமிருந்து வந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் காட்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது நடக்கப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஹமாஸை ஒழிப்பதற்கான உத்தரவு கிடைத்தவுடன், அந்தப் பணியை முழுமையாக முடிக்கவும், அதன் மூலம் இடம்பெயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் இஸ்ரேலிய ராணுவம் (IDF) தயாராக உள்ளது,” என்றார்.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 70 சதவீதமானோர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.





