புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை , ஆகஸ்ட் 9, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மண்டபங்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் வருகைப் பதிவேடுகள், அந்தந்தப் பாடசாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அத்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களின் தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், இன்று (23) முதல் ஆகஸ்ட் 03 வரை இணையவழியில் அத்தகைய திருத்தங்களைச் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ‘www.doenets.lk’ என்ற துறையின் இணையதளத்திற்குச் சென்று, “எங்கள் சேவைகள்” பிரிவின் கீழ் உள்ள பரீட்சை மையத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது ‘onlineexams.gov.lk’ என்ற இணையவழி பரீட்சை சேவை அமைப்பு மூலமாகவோ திருத்தங்களைச் செய்யலாம்.




