பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இரு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





