நீர்கொழும்பு சிறைக் கலவரம் – ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கர இன்று (06) பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் 5ஆம் திதகி நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் 22 கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஒரு ஜனாதிபதி குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, இழப்பீடு, ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் பெற்ற கடன்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலை மற்றும் அவர்களின் முழுமையான இயலாமை குறித்து சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சரவை சட்டத்தரணி ஹர்ஷனா நனயக்கரா மேலும் தெரிவித்தார்.




