இலங்கை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 12 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கைதிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை வளாகத்திற்குள் ஏற்பட்ட இந்த அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்த மோதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.