இலங்கை

நீர்கொழும்பு சிறைக் கலவரம் – ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கர இன்று (06) பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். கடந்த மாதம் 5ஆம் திதகி நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் 22 கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார். மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே […]

இலங்கை

நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் : கலவரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

  • July 9, 2026
  • 0 Comments

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தின் போது, ​​கைதிகள் சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரிக்கு, கைதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அவரது பாதுகாப்பை உறுதி செய்ய சிறைத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அந்த அதிகாரி அவசரகால சூழ்நிலையின்போது பணிக்கு திரும்பியுள்ளதாகவும் சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கலவரத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் “கட்டுவெல்லகம சுரேஷ்” என […]

இலங்கை

கைதிகள் இடமாற்றம் தொடர்பில் நீதியமைச்சு விளக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை வைத்திருப்பது பொருத்தமானதல்ல என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த சிறை வளாகம் ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தின் விளைவாக, சிறை வளாகம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன்படி, புலனாய்வாளர்கள் தங்கள் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளவும், கைதிகளின் […]

இலங்கை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 12 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கைதிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை வளாகத்திற்குள் ஏற்பட்ட இந்த அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்த மோதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.