உலகம் செய்தி

17 வருடங்கள் பிறகு வங்கதேச வாக்காளர் பட்டியலில் இணைந்த தாரிக் ரஹ்மான்

  • December 27, 2025
  • 0 Comments

லண்டனில்(London) 17 ஆண்டுகளுக்கும் மேலான சுய-நாடுகடத்தலில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷின்(Bangladesh) வாக்காளர் பட்டியலில் தன்னைப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டை(NIC) பெறுவதற்கான நடவடிக்கைகளை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்(BNP) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முடித்துள்ளார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) 60 வயதான மகன், கடுமையான பாதுகாப்பின் கீழ் டாக்காவில்(Dhaka) உள்ள தேர்தல் ஆணைய(EC) அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் சேர்க்கைக்காக கைரேகைகள்(fingerprints) மற்றும் கருவிழி ஸ்கேன்களை(iris scans) வழங்கியுள்ளார். […]

#Vijay #Atlee #JanaNayagan #JanaNayaganAudioLaunch #Malaysia #ThalapathyVijay #AtleeEmotional #ViralVideo #KollywoodNews பொழுதுபோக்கு

விஜய்யை கட்டிப்பிடித்து முத்தமிட்ட அட்லீ – மலேசியாவில் உருக்கமான தருணம்!

  • December 27, 2025
  • 0 Comments

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் திருவிழாவைப் போல நடைபெற்று வருகிறது. நேற்றைய தினமே படக்குழுவினர் அனைவரும் விமானம் மூலம் மலேசியா சென்றடைந்த நிலையில், இன்றைய விழாவிற்கு தளபதி விஜய் மிகவும் நேர்த்தியான கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து வருகை தந்தார். அவர் மைதானத்திற்குள் நுழைந்தபோது எழுந்த ஆரவாரம் மலேசியாவையே அதிர […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் மராத்தி பேசத் தெரியாததற்காக 6 வயது மகளைக் கொன்ற பெண்

  • December 27, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவில்(Maharashtra) நிலவும் மொழி சர்ச்சைக்கு மத்தியில் சிறுமிக்கு மராத்தி சரியாக பேசத் தெரியாததால் ஒரு பெண் தனது ஆறு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிறுமியின் மரணத்தை மாரடைப்பு என்று காட்ட ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கலம்போலி(Kalamboli) காவல்துறையினர் தாயாரை கைது செய்தனர். சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் காரணமாக அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டனர், இது சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. 2017ல் திருமணமான ஜோடி 2019ல் தங்கள் மகளை பெற்றெடுத்தனர். […]

பொழுதுபோக்கு

20 வயது பெண்ணுடன் சூர்யாவின் மேஜிக்கல் காதல்; கசிந்தது சூர்யா 46 கதை!

  • December 27, 2025
  • 0 Comments

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சூர்யா தனக்கும் மமிதா பைஜுவுக்கும் இடையிலான 25 வயது வித்தியாசக் காதல் கதையில் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் அளித்த பேட்டியில், “சூர்யா 46” படத்தின் கதை 45 வயதுடைய ஆணுக்கும், 20 வயதுடைய பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

ஐரோப்பாவில் இலகுவில் குடியுரிமை பெறக்கூடிய 06 நாடுகள்!

  • December 27, 2025
  • 0 Comments

பல ஐரோப்பிய நாடுகள் குடியுரிமை விதிகளை கடினமாக்கி வருகின்ற நிலையில், சில நாடுகள் குடியுரிமை பெற எளிதான வழிகளை வழங்குகின்றன. இதற்கமைய முதலீடு, வம்சாவளி அல்லது வதிவிடத்தின் மூலம், இந்த நாடுகள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கான செயல்முறையை எளிதாக்குகின்றன. அந்த நாடுகளை விரிவாக பார்க்கலாம். 01. டொமினிகா (Dominica) டொமினிகா உலகிலேயே மிகவும் மலிவு விலையில் குடியுரிமையை வழங்குகிறது. பொருளாதார பன்முகத்தன்மை, குறைந்தபட்ச முதலீடு அல்லது ரியல் எஸ்டேட் வாங்குதல் மூலம், வெளிநாட்டினர் சில மாதங்களில் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

  • December 27, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே(Boxing Day) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து […]

இந்தியா செய்தி

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களே காரணம் – ஸ்டாலின் விசனம்

  • December 27, 2025
  • 0 Comments

பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிமுக அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரச விழாவொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளா்ர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒன்றிய […]

இலங்கை செய்தி

கொழும்புக்கு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

  • December 27, 2025
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை (28) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூர சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து நாளை (28) இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

பொழுதுபோக்கு

வசூல் மழையில் நனையும் ‘துரந்தர்’ – ரன்வீர் சிங்கின் மாஸ் ஹிட்!

  • December 27, 2025
  • 0 Comments

ரன்வீர் சிங் நடிப்பில் டிசம்பர் 5, 2025 அன்று வெளியான ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், இப்படம் உலகளவில் ₹1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் 5, 2025 அன்று வெளியான ‘துரந்தர்’, மிகக் குறுகிய காலத்தில் ₹1000 கோடி வசூலைத் தாண்டியுள்ள 9-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 21-வது நாள் […]

அரசியல் இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

  • December 27, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (27) சுட்டிக்காட்டினார். எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் […]