உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 05 பேர் படுகாயம்!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வடமேற்கு, டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக  பெருநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வால்டர் வொஷிங்டன் (Walter Washington ) கன்வென்ஷன் சென்டரிலிருந்து சுமார் இரண்டு தொகுதிகள் தொலைவில் நேற்று  இந்த துப்பாக்கிக்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதாள குழு […]

உலகம் செய்தி

இந்த ஆண்டில் உலகை உலுக்கிய பேரழிவுகளால் $120 பில்லியன் இழப்பு!

  • December 27, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் காலநிலை பேரழிவுகள் உலகிற்கு $120 பில்லியன் (£95 பில்லியன்) க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவுகள் ஆசியாவில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் எய்ட் தொண்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, காலநிலை தொடர்பான 10 பேரழிவுகளை அடையாளம் கண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் $1 பில்லியனுக்கும் (£790 மில்லியன்) அதிகமாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நாளை களமிறங்கும் நிலையில் உக்ரைன் தலைநகர்மீது ரஷ்யா தாக்குதல்!

  • December 27, 2025
  • 0 Comments

உக்ரைன் (Ukrain) தலைநகர் கீவ் (Kyiv) மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா (Russian) பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதல் இடம்பெற்றுள்ளதை Kyiv நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் Donald Trump இறங்கியுள்ளார். அவருக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் (Zelenskyy) இடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்று மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலையடுத்து உக்ரைன் வான் […]

இலங்கை கருத்து & பகுப்பாய்வு செய்தி

மேற்கு மாகாணத்தை சார்ந்திருக்கும் இலங்கையின் பொருளாதாரம் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

  • December 27, 2025
  • 0 Comments

இலங்கையின் பிராந்திய பொருளாதார நிலப்பரப்பு 2024 ஆம் ஆண்டில் மிதமான பன்முகத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டியுள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் மேற்கு மாகாணத்தையே சார்ந்து இருக்கிறது. இதனால் பிராந்திய ரீதியிலான வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கு மாகாணம் நாட்டின் பொருளாதார சக்தியாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டாலும், தேசிய உற்பத்தியில் அதன் பங்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் சரிவடைந்துள்ளதை புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கமைய 2023 […]

உலகம் செய்தி

இன்று முதல் போர் நிறுத்தம்: தாய்லாந்து, கம்போடியா இணக்கம்!

  • December 27, 2025
  • 0 Comments

தாய்லாந்தும் Thailand, கம்போடியாவும் Cambodiaமீண்டும் போர் நிறுத்தத்துக்கு (ceasefire) இணங்கியுள்ளன. இதன்மூலம் பல வாரங்களாக நீடித்த போர் இன்று (27) மதியத்துடன் நிறைவுக்கு வருகின்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 நாட்களாக நீடித்த போரில் இரு தரப்பிரும் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையில் நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகின்றது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த […]

உலகம் செய்தி

ஜப்பானில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி, பலர் ஆபத்தான நிலையில்!

  • December 27, 2025
  • 0 Comments

ஜப்பானில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,  நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவிலிருந்து வடமேற்கே சுமார் 160 கிலோமீட்டர் (100 மைல்) தொலைவில்  மினகாமி (Minakami)  நகரில் உள்ள விரைவுச் சாலையில் இன்று இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 77 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த 26 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து […]

ஐரோப்பா

துருக்கியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி கைது!

  • December 27, 2025
  • 0 Comments

புத்தாண்டு கொண்டாட்டங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த பிரதான சூத்திரதாரியை துருக்கி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். தென்கிழக்கு நகரமான மாலத்யாவில் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய கூட்டு நடவடிக்கையில் இப்ராஹிம் புர்டகுசின் (Ibrahim Burtakucin) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் துருக்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மோதல் மண்டலங்களில் நடந்து வரும் சண்டையில் சேர வாய்ப்பு தேடி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

சிவப்புக் கோட்டை கடந்த அமெரிக்கா – 20 நிறுவனங்கள், 10 நிர்வாகிகள் மீது தடை விதித்த சீனா!

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவிற்கு சொந்தமான 20 பாதுகாப்பு  நிறுவனங்கள் மற்றும் 10 நிர்வாகிகள் மீது தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. தைவானுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை விநியோகம் செய்துவது தொடர்பில் வொஷிடன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சீனாவில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றைக் கையாள்வதைத் தடை செய்வதும் இந்தத் தடைகளில் அடங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிறுவனங்களில் நார்த்ரோப் க்ரம்மன் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் ( Northrop […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார். சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு, “ நாடாளுமன்றம் […]