ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி: மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அத்தியாவசியமாகப் பிரகடனம்
இலங்கையின் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்துப் பணிகள், எரிபொருள் மற்றும் பெற்றோலியப் பொருட்கள், எரிவாயு விநியோகம் மற்றும் நீர் வழங்கல் சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்துறைகளில் எவ்விதத் தடையுமின்றி சேவைகள் […]













