இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி: மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அத்தியாவசியமாகப் பிரகடனம்

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கையின் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்துப் பணிகள், எரிபொருள் மற்றும் பெற்றோலியப் பொருட்கள், எரிவாயு விநியோகம் மற்றும் நீர் வழங்கல் சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்துறைகளில் எவ்விதத் தடையுமின்றி சேவைகள் […]

#Trincomalee #SriLanka #ISRO #IndianRocket #SpaceDebris #BreakingNews #TamilNews #TrincoBeach இலங்கை செய்தி

விண்ணில் இருந்து விழுந்ததா? திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட் பாகங்கள்!

  • December 28, 2025
  • 0 Comments

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற […]

#Tamannaah #RedMagic #MilkyBeauty #TamannaahBhatia #RedOutfit #ViralPhotos #Kollywood #TamannaahFans #BeautyInRed புகைப்பட தொகுப்பு

தமன்னா + சிவப்பு = அழகு! ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த புகைப்படங்கள்.

  • December 28, 2025
  • 0 Comments

தமன்னாவின் நத்தார் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. தமன்னசிகப்பு இரவு உடையில்-கண்களை கொள்ளைகொள்ளும் சிரிப்புடன் தமன்னாவின் அழகிய புகைப்படங்கள் ! சிவப்பு நிற உடையில் செர்ரி பழமாய் தமன்னா… சொக்கிப்போன ரசிகர்கள் சிவப்பு உடையில் ‘மில்கி பியூட்டி’ தமன்னா: அந்த புன்னகைக்கு ஈடு இணை ஏது?  

உலகம் செய்தி

உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் இந்தியாவிற்கு தப்பியோட்டம்

  • December 28, 2025
  • 0 Comments

வங்கதேச(Bangladesh) அரசியல் ஆர்வலர் ஒஸ்மான் ஹாடி(Osman Hadi) கொலையில் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் எல்லையைக் கடந்து மேகாலயாவிற்கு(Meghalaya) தப்பிச் சென்றுள்ளதை டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறை(DMP) உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, இந்திய அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து வருவதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடியவர்கள் ஃபைசல் கரீம் மசூத்(Faisal Karim Masood) மற்றும் ஆலம்கீர் ஷேக்(Alamgir Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன், மைமென்சிங்கில்(Mymensingh) உள்ள ஹலுகாட்(Halukhat) எல்லை […]

ஐரோப்பா செய்தி

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் மரணம் – இருவர் மாயம்

  • December 28, 2025
  • 0 Comments

ஸ்பெயினின்(Spain) தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காணாமல் போயுள்ளனர். மலகாவில்(Malaga) வெள்ளத்தில் ஒரு வேன் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் வேனில் இருந்த இரண்டாவது பயணி இன்னும் காணவில்லை என்றும் ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, கிரனாடாவில்(Granada) மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்படை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தில் […]

#ShrutiHaasan #BlackBeauty #ShrutiHaasanPhotos #LatestPhotoshoot #Kollywood #ViralPhotos #ShrutiHaasanFans #BlackOutfit பொழுதுபோக்கு

கறுப்பு உடையில் காந்தக் கண்கள்!- சுருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்; சொக்கிப்போன ரசிகர்கள்!

  • December 28, 2025
  • 0 Comments

சுருதிகாசனின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. கறுப்பு உடையில் ரசிகர்களின் உறக்கத்தை கொள்ளைகொள்ளும் கனவுக்கன்னி!    

உலகம் செய்தி

சுரினாமில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

  • December 28, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான சுரினாமின்(Suriname) தலைநகர் பரமரிபோவில்(Paramaribo) நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அவரது சொந்த குழந்தைகளில் நான்கு பேர் அடங்குவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அவரது 11 வயது மகளை அவர்களின் வீட்டின் சமையலறையில் 44 முறை […]

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பாராகிளைடர் – இளம் விமானி மரணம்

  • December 28, 2025
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தின்(Himachal Pradesh) காங்க்ரா(Kangra) மாவட்டத்தில், பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவானில் சமநிலையை இழந்து விபத்துக்குள்ளானதில் அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிர் பில்லிங்(Bir Billing) பாராகிளைடிங் தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிர் பில்லிங் பாராகிளைடிங் சங்கத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நடுவானில் சமநிலையை இழந்து, ஏவுதளத்திற்கு கீழே உள்ள சாலை அருகே விபத்துக்குள்ளானது. உடன் […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நிலை கவலைக்கிடம்

  • December 28, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின்(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்(Khaleda Zia) உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சியின்(BNP) 80 வயதான தலைவரான ஜியா, நவம்பர் 23 முதல் டாக்காவின்(Dhaka) எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “செயற்கை சுவாசக் கருவி(ventilator) உதவியுடன் உள்ள கலிதா ஜியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர் மிகவும் முக்கியமான கட்டத்தை கடந்து வருகிறார்” என்று மருத்துவர் ஜாஹித்(Zahid ) மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் […]

உலகம்

80 ஆண்டுகளுக்குப் பிறகு செர்பியா தலைநகரில் அகற்றப்பட்ட 470 கிலோ எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு

  • December 28, 2025
  • 0 Comments

செர்பியாவின்(Serbia) தலைநகரான பெல்கிரேடின்(Belgrade) மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து 470 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப் போரின் வான்வழி குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதகிரிகள் தெரிவித்துள்ளனர். 1944ம் ஆண்டு நாஜி(Nazi) ஆக்கிரமிப்பிலிருந்து பெல்கிரேடை விடுவித்தபோது, ​​ஜெர்மனியின்(Germany) நிலைகள் மீதான நேச நாட்டு விமானத் தாக்குதல்களின் போது அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட AN-M44 குண்டு பயன்படுத்தப்பட்டது. ஒரு குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு வர்த்தக வளாகம்(shopping mall) அருகே குண்டு காணப்பட்டதால் தீவிர கண்காணிப்புக்கு பிறகே குண்டு […]