இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பாராகிளைடர் – இளம் விமானி மரணம்

Paraglider crashes in Himachal Pradesh – young pilot dies

இமாச்சலப் பிரதேசத்தின்(Himachal Pradesh) காங்க்ரா(Kangra) மாவட்டத்தில், பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவானில் சமநிலையை இழந்து விபத்துக்குள்ளானதில் அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிர் பில்லிங்(Bir Billing) பாராகிளைடிங் தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிர் பில்லிங் பாராகிளைடிங் சங்கத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நடுவானில் சமநிலையை இழந்து, ஏவுதளத்திற்கு கீழே உள்ள சாலை அருகே விபத்துக்குள்ளானது. உடன் வந்த சுற்றுலாப் பயணி காயமடைந்த நிலையில், விமானி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த விமானி மண்டி(Mandi) மாவட்டத்தில் உள்ள பரோட்டைச்(Barot) சேர்ந்த மோகன் சிங்(Mohan Singh) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி