ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் நீரிழிவு நோய் சிகிச்சையில் இன ரீதியான பாகுபாடு ; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

  • January 1, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் தெற்காசிய வம்சாவளி மக்கள், நீரிழிவு நோய்க்கான நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் சி.ஜி.எம் (CGM) கருவிகள், வெள்ளை இனத்தவர்களுக்கே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்த அளவு கருவிகள் வழங்கப்படும் பகுதிகளில் 17.5 சதவீத சிறுபான்மையினர் வாழ்கின்றனர். ஆனால், அதிக கருவிகள் வழங்கப்படும் இடங்களில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 5.3 சதவீதமே உள்ளது. இனம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளே இந்த இடைவெளிக்கு […]

உலகம்

அமெரிக்க துருப்புகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் ட்ரம்ப் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • January 1, 2026
  • 0 Comments

சிகாகோ (Chicago) மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த தேசிய காவல்படை துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். காவல் பணிக்கு துருப்புக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குற்றங்கள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, ​​நாங்கள் மிகவும் மாறுபட்ட மற்றும் வலுவான வடிவத்தில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புதிய கூட்டுத் தடுப்பூசி முறை இன்று முதல் அமுல்

  • January 1, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு குழந்தை முறையான தடுப்பூசி இன்றி பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இனி வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான 95 சதவீதத்தை எட்ட முடியாத நிலையில், அடுத்த வாரம் முதல் லண்டன், மிட்லாண்ட்ஸ் உள்ளிட்ட 12 பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்குகிறது. ஜிபி (GP) எனப்படும் பொது மருத்துவரிடம் பதிவு செய்யாதவர்கள் மற்றும் பயணச் சிக்கல் உள்ள குடும்பங்களை இலக்காகக் […]

இலங்கை செய்தி

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி பலி: புத்தாண்டில் சோகம்!

  • January 1, 2026
  • 0 Comments

வாகன பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் வேன் மோதி பலியாகியுள்ளார். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை Ambalangoda நகரிலேயே இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகள் , அம்பலாங்கொடை நகரில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தினர். அவ்வேளையிலேயே இரு அதிகாரிகளையும் மோதி தள்ளிவிட்டு வேனில் சென்றவர்கள், தப்பியோடியுள்ளனர். அம்பாந்தோட்டை பகுதியை நோக்கியே குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

  • January 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய கடவுச்சீட்டுக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முன் அட்டையில் மன்னர் சார்லஸின் சின்னம் பொறிக்கப்பட்ட இந்த கடவுச்சீட்டுகள் இதுவரை தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் மிகவும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹாலோகிராபிக் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய அம்சங்கள் உட்பட மேம்பட்ட போலி எதிர்ப்பு தொழில்நுட்பத்தை இந்த கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளன. இதேவேளை ராணி எலிசபெத் II இன் சின்னம் கொண்ட கடவுச்சீட்டுக்கள் அவற்றின் காலாவதி திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்த ஆப்பிரிக்க நாடுகள்!

  • January 1, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடிகளின்  குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இவ்விரு நாடுகளும் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தனித்தனி அறிக்கைகளின் மூலம் இது தொடர்பில் அறிவித்துள்ளன. பரஸ்பரம் என்ற கொள்கையின்படி, மாலி குடியரசின் அரசாங்கம் மாலி குடிமக்கள் மீது […]

உலகம் செய்தி

நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மேயராக மம்தானி பதவியேற்பு

  • January 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயோர்க்கின் மேயராக, 34 வயதான ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) இன்று அதிகாலை பதவியேற்றார். மேன்ஹாட்டனில் (Manhattan) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சிட்டி ஹால் (City Hall) சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ரகசிய விழாவில், புனித குர்ஆன் மீது கைவைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன் மூலம் நியூயோர்க் மாநகரின் முதல் முஸ்லிம் மேயர், முதல் தெற்காசிய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் எனப் பல […]

அரசியல் இலங்கை செய்தி

புத்தாண்டு பிறந்த கையோடு மாகாணசபைத் தேர்தலை கோருகிறது மொட்டு கட்சி!

  • January 1, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam மேற்கண்டவாறு வலியுறுத்தினார். “நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

(BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!

  • January 1, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட் பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில்  பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana)  உள்ள  பாரில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறான பொருள் வெடித்தது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. சுவிஸ் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிவதை மட்டுமே காட்டுகிறது. சம்பவ இடத்திற்கு […]