மட்டக்களப்பு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்ந்து நாளை (08) இலங்கையின் கிழக்கு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]













