அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமாரை உடன் இடைநிறுத்துங்கள்: அர்ச்சுனா முறைப்பாடு!

  • January 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு gajendrakumar Ponnambalam எதிராக சபாநாயகரிடம் இன்று (7) முறைப்பாடு செய்துள்ளார் அர்ச்சுனா எம்.பி. Archuna. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சுனா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக […]

இந்தியா

மோடியின் சொந்த மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை – பலர் ஆபத்தான நிலையில்!

  • January 7, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான காந்திநகரில், குடிநீர் பிரச்சினையால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 133 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குஜராத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காந்திநகரில் குடிநீர் மாசுப்பாடு காரணமாக  பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேர் தற்போது  மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய் வலையமைப்பில் குறைந்தது 21 கசிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இது கழிவுநீர் மூலம் மாசுபடுவதற்கு வழிவகுத்தது என்று உள்ளுர் ஊடகங்கள் […]

உலகம்

ஜப்பானில் மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை வழக்குகள் – புதிய பிரச்சாரம் ஆரம்பம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஜப்பானில் இளம் வயதினரிடையே தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புதிய பிரச்சாரத்தின் கீழ், துன்பத்தில் இருக்கும்போது குழந்தைகள் பெரியவர்களிடம் வசதியாக ஆலோசனை நடத்தக்கூடிய சூழல்களை உருவாக்குவதை தன்னார்வலர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஜப்பானில் ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் குறைந்திருந்தாலும், சுகாதார அமைச்சக தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தொடக்க மற்றும் சீனியர் உயர்நிலை பாடசாலைகளைச் சேர்ந்த 527 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டார் சஜித்!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவை இணைக்க உருவாகும் புதிய சட்டமூலம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் , பிரித்தானியாவை மீளவும் இணைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் புதிய சட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் இங்கிலாந்தை இணக்கப்படுத்த அமைச்சர்களுக்கு போதுமான  அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. பிரெக்ஸிட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் இந்த சட்டமூலம் உணவுத் தரநிலைகள், விலங்கு நலன் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற சில விதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பிரித்தானிய அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை […]

இலங்கை செய்தி

சாரா ஜஸ்மின் எங்கே?

  • January 7, 2026
  • 0 Comments

புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும் அதனை நம்ப முடியாது. அவர் தப்பி சென்றிருக்கக்கூடும். அவர் இந்தியாவில் இருக்கின்றார் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறி இருந்தனர். பாதாள குழு […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து தாயம் திரும்புகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung, எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், இலங்கையில் நான்கு ஆண்டுகள் சேவையாற்றினார். ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள 39 இராஜதந்திரிகள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கொழும்பிலிருந்து வாஷிங்டன் செல்கின்றார். ஜுலி சங், இலங்கை அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாக இருந்த […]

உலகம்

ஈரானில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள் – 36 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

  • January 7, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேற்படி போராட்டத்தில் 34  பொதுமக்களும், இரு பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை, ஆனால் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு 31 மாகாணங்களில் இடம்பெற்று வரும் குறித்த போராட்டங்களால் இதுவரை 60 […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய இராணுவத் தளபதி!

  • January 7, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi, இலங்கை வந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே Major General D.K.S.K. Dolage வரவேற்றார். இந்திய தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளது. இந்திய இராணுவத் தளபதி, இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் இன்று […]