இலங்கை–ஜேர்மனி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுடன் இன்று புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. நிதி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 188 மில்லியன் யூரோ பெறுமதியான கடனை மறுசீரமைப்பதற்கான ஆவணங்களில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜேர்மனி சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) ஆகியோர் கையெழுத்திட்டனர். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (OCC) இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள […]













