கட்டுநாயக்கவில் தங்க பஸ்மங்களுடன் ஐவர் கைது!
சுங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் மற்றும் தங்க பஸ்மம் ஆகியவற்றை, இந்தியா, சென்னைக்கு கடத்திச் செல்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் ஐவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அண்மையில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான வர்த்தகர்கள் நால்வர் மற்றும் 55 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சென்னை […]













