இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக இந்த சேவை இடம்பெறும் என விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க மற்றும் வியட்நாமின் Ho Chi Minh நகருக்கு இடையில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வியட்ஜெட் விமான சேவையும் அதன் பயண சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்விரு விமான சேவைகளும் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு தலா 03 விமானப் பயணங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவைகள், நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதில் வலுவானவொரு காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை