உலகம்

பிலிப்பைன்ஸில் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லொறி : 09 பேர் பலி!

  • February 4, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் மலைப்பாதையில் பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 09 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்ரோஸ் ஓரியண்டல் (Negros Oriental) மாகாணத்தில் உள்ள பயாவன் (Bayawan) நகரில் கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டு மீள திரும்பும்போது விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா சீர்திருத்த UK கட்சி?

  • February 4, 2026
  • 0 Comments

பிரிட்டனை ஆட்சி செய்ய தனது கட்சி பாதி அளவே தயார் நிலையில் உள்ளது என்பதை சீர்திருத்த UK கட்சி தலைவர் நிகல் ஃபராஜ் (Nigel Farage) ஒப்புக்கொண்டுள்ளார். பிபிசியின் ஆட்சி செய்ய தயாரா என்ற ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், சாத்தியமான பொதுத் தேர்தலுக்கு கட்சியின் தயார்நிலை பற்றி விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பிரித்தானிய அரசியலின் மைய-வலதுசாரிகள் சீர்திருத்தத்தைச் சுற்றி ஒன்றுபடுவதால், சீர்திருத்த UK இல் சேர்ந்துள்ள கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து […]

அரசியல் இலங்கை செய்தி

தீவிர அரசியலுக்கு விடை கொடுத்தார் மைத்திரி! 

  • February 4, 2026
  • 0 Comments

தான் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்.” எனவும் அவர் கூறினார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி SLFP ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர் மைத்திரிபால சிறிசேன. 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றி […]

ஐரோப்பா

ஸ்பெயின் அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடை : பிரதமரை பாசிச சர்வாதிகாரி என விமர்சிக்கும் மஸ்க்!

  • February 4, 2026
  • 0 Comments

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவை  பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ஸ்பானிஷ் பிரதமரை “உண்மையான பாசிச சர்வாதிகாரி” மற்றும் “கொடுங்கோலர்” என்று அவர் விவரித்துள்ளார். இதற்கிடையே சைபர் குற்ற விசாரணையின் ஒரு பகுதியாக X இன் பாரிஸ் அலுவலகங்களில் பிரெஞ்சு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அல்காரிதம் கையாளுதல், மோசடி தரவு பிரித்தெடுத்தல் மற்றும் X இன் AI சாட்போட், க்ரோக்கைப் பயன்படுத்தி, குழந்தை துஷ்பிரயோக […]

ஐரோப்பா

லார்ட் மண்டேல்சன் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளார் – ஸ்டார்மர் கருத்து!

  • February 4, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) லார்ட் மண்டேல்சனின் ( Lord Mandelson)  தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அவர் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். லார்ட் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு வர்த்தம் தெரிவித்த அவர், தற்போது இருக்கும் அறிவுடன் அவர் செயற்பட்டிருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மண்டேல்சனை  பிரிவி கவுன்சிலில் இருந்து (Privy Council) நீக்குவதற்கு மன்னருடன் விவாதித்ததாகவும் […]

இலங்கை செய்தி

” உண்மை வெளிவரும் நாளே எமக்கு சுதந்திரம்” வவுனியாவில் போராட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினமான இன்று , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் என  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறினர். வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சங்கப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர். “ இலங்கைக்கு சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் […]

உலகம்

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ICE முகவர்கள் – நீதிபதிகள் கடும் விமர்சனம்!

  • February 4, 2026
  • 0 Comments

குடியேறிகளை விடுவிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியமைக்காக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மீது அமெரிக்க கூட்டாட்சி நீதிபதிகள் கடுமையான விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மாவட்ட நீதிபதி ஜெர்ரி ஆர். பிளாக்வெல் (Blackwell), ICE இன் “ஆபத்தான” தோல்விகளை எடுத்துரைத்தார், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததற்காக அதிகாரிகள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படலாம் என்று பரிந்துரைத்தார். அதிகமான நபர்கள்  தடுத்து வைக்கப்பட்டமை மற்றும், வழக்குகளை தீர்ப்பதற்கான அதன் திறனை மீறியமையே நீதிமன்றத்தின்  உத்தரவுகளுக்கு இணங்காததற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார். […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு ICC இறுதி எச்சரிக்கை விடுப்பு!

  • February 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு , சர்வதேச கிரிக்கெட் சபை ICC மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதற்கு ICC கடும் எதிர்ப்பை வெளியிட்டது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. எனினும், […]

பொழுதுபோக்கு

‘லீடர்’ ஆக வருகிறார் லெஜெண்ட் சரவணன்!

  • February 4, 2026
  • 0 Comments

பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் விளம்பரத்தில் நடித்து – அதன்பின்னர் சினிமாவிலும் கால் பதித்தார். வியாபாரத்தை போலவே நடிப்பிலும் லெஜெண்ட் சரவணனன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் வெற்றிநடை போடவில்லை. படு மோசமான படமெனவும் கூறிவிட முடியாது, இந்நிலையிலேயே அடுத்ததாக சிறந்த கதை அம்சம் உள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் […]

இலங்கை செய்தி

அநுர அரசின் இனவாதமற்ற பயணத்துக்கு வாசு பாராட்டு!

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். “ இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்ல. சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர். எனவே, ஏற்பட்ட மாற்றத்தை சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு […]