இலங்கை

பிரித்தானியாவில் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

  • August 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில்  பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேன், இதற்கான செயலணி ஒன்றையும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த நடவடிக்கை […]

இலங்கை

சக நண்பர்களின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி! பின்னணியில் வெளியான காரணம்

நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை அருந்திய 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது குறித்த பாடசாலையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே தரத்தில் படிக்கும் சக மாணவர்களுடன் இருந்த முன்விரோதம் காரணமாக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

திரிஷாவுடன் சுற்றுலா சென்றாரா விஜய்? படக்குழு வெளியிட்ட உறுதி

  • August 15, 2023
  • 0 Comments

சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக ஷாப்பிங் செல்லக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலானது. இதற்கு ரசிகர்கள் விஜய் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கமன்ட் செய்து வந்தனர். விஜய் திரிஷா விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இல்லை என்றும், இந்த புகைப்படங்கள் அனைத்தும் லியோ படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று காப்பி ரயிட்ஸ் அடிப்படையில் டெலீட் செய்து வருகிறது செவென் ஸ்கிரீன்ஸ் […]

செய்தி

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப் பொதி!

  • August 15, 2023
  • 0 Comments

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் உரிய சோதனையை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய்  எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டும்!

  • August 15, 2023
  • 0 Comments

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நோய்க்கும் விசேட வைத்தியர்கள் இருப்பின் தேசிய வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலை நீக்க முடியும் என கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அத்துடன், பொது சுகாதார அவசர நிலை மற்றும் அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கு தேவையான மனித வளம் இந்த நாட்டில் மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு குறித்து தேசிய கணக்காய்வு  தணிக்கை […]

மத்திய கிழக்கு

நைஜர் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு

  • August 15, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசுமுக்கு எதிராக திரும்பிய ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். இதற்கு ஐ.நா., ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில் முன்னாள் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர போவதாக நைஜர் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு எதிரான […]

இலங்கை

வாகன இறக்குமதியில் தளர்வு – வர்த்தமானி வெளியீடு!

  • August 15, 2023
  • 0 Comments

பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கை

தலைமன்னார் – கொழும்பு இடையே கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம் – ரணில் விக்கிரமசிங்க

  • August 15, 2023
  • 0 Comments

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.இதன்போது கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தார். இதன் போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய […]

பொழுதுபோக்கு

அக்ஷன் கிங் அர்ஜுனின் சொத்து மதிப்பு வெளியானது..

  • August 15, 2023
  • 0 Comments

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அர்ஜுன் இன்று தன்னுடைய 61 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவ்வாறு 42 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் இவர் தற்போது லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அடுத்து அஜித், சூப்பர் ஸ்டார் என டாப் நடிகர்களுடன் இணைவதற்கும் இவர் தயாராகிக் […]

இலங்கை

முட்டைகளின் விலையில் வீழ்ச்சி!

  • August 15, 2023
  • 0 Comments

இந்திய  முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதால் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர். இந்திய முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உள்ளூர் முட்டையின் விலை 44 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்திய முட்டைகள் வருவதற்கு முன், ஒரு முட்டையின் விலை, 60 முதல், 65 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முட்டையின் விலையும் குறையும்.